ரஃபேல் வழக்கில் புதிதாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் தேவை: மத்திய அரசு

ரஃபேல் மறுசீராய்வு வழக்கில் புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரியுள்ளது.

ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பான மறுசீராய்வு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரியுள்ளது. அதேசமயம், உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற இருக்கும் மறுசீராய்வு மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் மத்திய அரசு, பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version