இந்தோனேசியா ஓபன் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஜகார்தாவில் நடைபெற்ற இந்தோனேசியா ஓபன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி.சிந்து உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுஃபெய்யை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் அகனே யமகுச்சியுடன் அவர் பலப்பரீட்சை நடத்தினார்.

அகனேவை வென்று சிந்து தங்கப் பதக்கம் வெல்வார் என்று இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். போட்டியின் முதல் சுற்றை அகனே யமகுச்சி 21-15 என்ற நேர் செட்டுகளில் வென்றார். 2-வது சுற்றில் வெற்றி பெற சிந்து கடுமையாக போராடினார். எனினும் 21-16 என்ற நேர் செட்டுகளில் அகனே யமகுச்சி வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதையடுத்து பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

Exit mobile version