விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை ஒட்டி, பொதுச்செயலாளர் முக்கிய அறிவிப்பு!

கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு

மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 308-ஆவது பிறந்த நாளையொட்டி தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்!

1.09.2023 – வெள்ளிக்கிழமை

இந்திய விடுதலை வரலாற்றில் “வெள்ளையனே வெளியேறு” என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போரட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 308 ஆவது பிறந்தநாளான 1.9.2023 – வெள்ளிக் கிழமை காலை 10 மணிகு, தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும் செவல் என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,

திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், MLA., அவர்கள், கழகப் பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

திரு. நத்தம் இரா. விசுவநாதன், MLA., அவர்கள், கழக துணைப் பொதுச்செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

திரு. என். தளவாய் சுந்தரம், MLA., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

திரு. செல்லூர் கே.ராஜூ, MLA., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

திரு. ஆர்.பி. உதயகுமார், MLA., அவர்கள், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

திரு. வி. கருப்பசாமி பாண்டியன், Ex. MLA., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்.

திரு. வி.வி. ராஜன் செல்லப்பா, MLA., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்.

திரு. சுதா கே. பரமசிவன் அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்.

திரு. இசக்கி சுப்பையா, MLA., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

திரு. ஆர். முருகையா பாண்டியன், Ex MLA., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்.

திரு. பி.ஜி. ராஜேந்திரன், Ex MLA, அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்.

திரு. ஏ.கே. சீனிவாசன் அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்.

திரு. ஐ.எஸ். இன்பதுரை, Ex MLA, அவர்கள், கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்

திரு. வி.எம். ராஜலெட்சும் அவர்கள், கழக தலமைச் செயற்குழு உறுப்பினர், கழக மகளிர் அணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.

திரு. பாப்புலர் வி. முத்தையா அவர்கள், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்.

திரு. தச்சை என். கணேச ராஜா அவர்கள், திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர்.

திரு. சி. கிருஷ்ணமுரளி, MLA., அவர்கள், திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர்.

திரு. எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன், Ex MLA., அவர்கள், தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்.

ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. தச்சை என். கணேசராஜா, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சி. கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோர் இணைந்து, இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மாமன்னர் பூலித்தேவன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version