ஹோல்ட்ஸ்வொர்த் அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டியுள்ளது-அதிமுக-வின் குடிமராமத்து பணிகளே காரணம்

புதுக்கோட்டை அருகே ஹோல்ட்ஸ்வொர்த் அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கட்டு முழு கொள்ளளவு எட்டியதற்கு அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளே காரணம் என பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகள் காரணமாக புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் நிரம்பின. கடையக்குடியிலுள்ள ஹோல்ட்ஸ்வொர்த் அணைக்கட்டும் தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஆலங்குடி, அறந்தாங்கி, உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு, இந்த அணைக்கட்டு நீர் வழங்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், இந்த அணைக்கட்டுக்கு இளைஞர்கள், கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வருகை புரிந்து அணையை கண்டு ரசித்து வருகின்றனர்.

Exit mobile version