புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 3 ஆம் தேதி கூடுகிறது

புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 3 ஆம் தேதி கூடவுள்ளதாகவும் அன்றைய தினமே சட்டப்பேரவை சபாநாயகர் தேர்வுக்கான தேர்தல் நடைபெறும் எனவும் பேரவையின் செயலாளர் வின்சென்ட் ராயர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 3 ஆம் தேதி காலை கூடவுள்ளது. சட்டப்பேரவை தலைவராக இருந்த வைத்தியலிங்கம், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது பதவியை ராஜினாமா செய்ததாக அறிக்கையில் பேரவையின் செயலாளர் வின்சென்ட் ராயர் தெரிவித்துள்ளார்.

இதனால் காலியாக உள்ள பேரவை சபாநாயகருக்கான தேர்தல் அன்றைய தினமே நடைபெறும் என குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்தலில் கலந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version