அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்த விவகாரம் : வரும் 14-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடுவதாக தகவல்

மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 14-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்த விவகாரம் தமிழகம், புதுச்சேரி மாநில விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு, சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி கண்டன தீர்மானம் நிறைவேற்றியது.

இதேபோன்று, புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் வரும் 14-ம் தேதி கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக சபாநாயகர் வைத்திலிங்கம், சட்டசபை செயலர் வின்சென்ட் ராயருடன் ஆலோசனை நடத்தினார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version