பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பல மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே திமுக அமைச்சருக்காக, பல மணி நேரம் கத்திருந்த மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளானர்கள். 

ரிஷிவந்தியத்தை அடுத்த லால்பேட்டை ஊராட்சியில்திமுக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

10 மணிக்கு விழா நடைபெறுவதாக இருந்த நிலையில், ஏராளமான பொதுமக்கள் முன்கூட்டியே அழைத்துவரப்பட்ட காக்க வைக்கப்பட்டனர்.

குறித்த நேரத்திற்கு திமுக அமைச்சர் எ.வ.வேலு வராததால், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் இரண்டாயிரத்து 500 ரூபாய் பணம் வழங்கப்பட்டதைப் போன்று தற்போதும், பரிசுத் தொகை வழங்காததால் மக்கள் அதிருப்தியுடன் உள்ளனர்.

Exit mobile version