குமரியில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் குமரி மற்றும் மலையோர பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பேச்சிப்பாறையில் 29 மில்லி மீட்டர் மழையும், பெருஞ்சாணியில் 22 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிற்றாரில் 43.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Exit mobile version