வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்

வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் ஆணைய விதிமுறைகள் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

அலுவலர்கள், வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு தனித்தனியாக பாதை அமைக்கப்பட்டிருப்பதாக கூறிய மாவட்ட ஆட்சியர், வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்போன், லேப்டாப் அல்லது இதர எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டிருப்பது குறித்து அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள், நாகப்பட்டினம் சார் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், வருவாய் கோட்டாட்சியர் முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version