மின்னணு வாக்கு இயந்திரம் உள்ள மேஜைக்கு மேல் சிசிடிவி: சேலம் ஆட்சியர்

வாக்கு எண்ணிக்கையின்போது மின்னணு வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மேஜைக்கு மேலும் சிசிடிவி கண்காணிப்பு உண்டு என, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார். சேலத்தில் வாக்கு எண்ணிக்கை குறித்த முன்னேற்பாட்டுக் கூட்டத்தை முடித்தபின், செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்கு எண்ணிக்கையின் போது, சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version