சேலம் மாவட்ட ஆட்சியராக எஸ்.ஏ.ராமன் பொறுப்பேற்பு

சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ரோகிணி பணியிடமாறுதல் செய்யப்பட்டதையடுத்து புதிய மாவட்ட ஆட்சியராக எஸ்.ஏ.ராமன் பொறுப்பேற்று கொண்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சேலம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ரோகிணி, கடந்த வாரம் பணியிட மாறுதல் செய்யப்பட்டு சென்னையில் உள்ள இசை பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக பணியாற்றி வந்த எஸ்.ஏ.ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சேலம் மாவட்ட நிர்வாகத்தில் 172-வது ஆட்சியராக நியமிக்கப்பட்ட எஸ்.ஏ.ராமன் முறைபடி கோப்புகளில் கையொப்பமிட்டு ஆட்சித்தலைவராக பொறுப்பேற்று கொண்டார். புதிய ஆட்சியருக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், வாழ்த்து தெரிவித்தனர்.

Exit mobile version