தனியார் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை

சென்னை துரைப்பாக்கத்தில் காதல் விவகாரத்தால் தனியார் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில் ஓட்டல் மேனஜ்மென்ட் டெக்னாலஜி படித்து வந்த கென்டமெலா ஷெவன்குமார் என்பவர், சக மாணவர்கள் மூன்று பேரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஷெவன்குமார் , சக மாணவி ஒருவரிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார். இது அந்த மாணவியின் உறவினரான மாணவர் சண்முகத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தனது நண்பர்கள் இருவரை சேர்த்துக்கொண்டு ஷெவன்குமாரை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது சண்முகம் கைதாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக துரைபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Exit mobile version