‘உலக அரங்கில் இந்தியாவின் மேம்பட்ட நிலைக்கு ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள் பெரும் பங்காற்றியுள்ளன’ – குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பெருமிதம்!

draupadi murmu

கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் திறனை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் உலகிற்கு நிரூபித்துள்ளன என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

டெல்லி ஐ.ஐ.டி.யின் வைர விழா கொண்டாட்ட நிறைவு விழாவில், குடியரசுத்தலைவர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர், இன்று உலக அரங்கில் இந்தியாவின் மேம்பட்ட நிலைப்பாட்டில் ஐ.ஐ.டி. கல்வி நிலையங்கள் பெரும் பங்காற்றியுள்ளன என பெருமிதம் தெரிவித்தார்.

ஐ.ஐ.டி.யின் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் நமது அறிவாற்றலை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர் என்றும் குடியரசுத்தலைவர் பெருமிதம் பொங்கப் பேசினார்.

Exit mobile version