மனைவியை கடத்தி வைத்திருப்பதாக பவர் ஸ்டார் புகார் -காவல்துறையினர் விசாரணை

தனது மனைவியை சிலர் கடத்தி வைத்திருப்பதாக காவல் நிலையத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் புகார் அளித்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலி. இவரை சிலர் கடத்தி ஊட்டியில் அடைத்து வைத்திருப்பதாக பவர் ஸ்டார் சீனிவாசன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், சினிமா பி.ஆர்.ஓ பிரீத்தி, செல்வின் உள்ளிட்ட 11 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனிடையே பணத்தகராறு காரணமாக ஜூலி கடத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக பவர் ஸ்டாரை சிலர் கடத்தி வைத்திருப்பதாக அவரது மனைவி ஜூலி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version