திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்தடை இருக்கும் என்பது தமிழக மக்களுக்கு தெரியும் – சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு..!

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு வந்துவிடும் என்று தமிழக மக்களுக்கு தெரியும் அதே நிலை தான் தற்போது நீடித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இன்று நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் குறிப்பிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அதிமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு நெசவாளர்களுக்கு மும்முனை மின்சாரம் தடையின்றி கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் திமுக ஆட்சி காலங்களில் மின்சார மின்வெட்டு என்பது தொடர்ந்து இருக்கும் என்றும் கூறினார்.  திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்தடை இருக்கும் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்  தற்போது அந்த நிலை தான் நீடித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவதாக 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தோம். ஆனால் மறுநாளே தேர்தல் அறிவிப்பு வருகை என்பது எங்களுக்கு தெரியாது என்றும், தற்போது திமுக தான் ஆட்சியில் உள்ளது ஆனால் 9 மணி நேரம் தான் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

Exit mobile version