சபரிமலை விவகாரத்தால் பிரதமர் மோடியின் கேரள பயணம் தள்ளிவைப்பு?

சபரிமலை விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் கேரள வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு பிரதமர் மோடி நாளை வர இருந்தார். மீண்டும் 27 ஆம் தேதி கேரள வரும் அவர் திருச்சூர், திருவனந்தபுரம் லோக்சபா தொகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டப்பட்டிருந்தது.

சபரிமலையில் 2 பெண்கள் வழிபட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பெரும்பாலான பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 1,369 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சூழலில், மோடியின் வருகை தள்ளி வைக்கப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version