முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான ஆன்லைன் தேர்வுகள் இன்று தொடக்கம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர், ஆகியவற்றுக்கான ஆன்லைன் தேர்வுகள் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.

இந்த தேர்வை 63 ஆயிரத்து 375 ஆண்கள், 1 லட்சத்து 22 ஆயிரத்து 80 பெண்கள், 8 திருநங்கைகள் உட்பட மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் ஆன்லைன் மூலம் எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 30 மாவட்டங்களில் 154 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த தேர்வு வரும் 29ந் தேதியுடன் நிறைவடைகிறது.

Exit mobile version