அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர முதலில் உடற்தகுதி மற்றும் எழுத்து தேர்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ஆன்லைன் மூலமாக பொது நுழைவுத் தேர்வும், அடுத்த கட்டமாக உடல் தகுதித் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் இந்த தேர்வில் பங்கேற்கலாம் என்றும் இணையதளத்தில் விண்ணப்பிக்க மார்ச் 15-ந் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version