என்எல்சி நிறுவனம் மற்றும் விடியா அரசை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!

விருத்தாசலம் மற்றும் புவனகிரி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில், சுரங்க விரிவாக்கம் மற்றும் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக நிலம் மற்றும் வீடுகளை கையகப்படுத்த நெய்வேலி என்எல்சி நிர்வாகம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சம அளவிலான இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை இல்லாமல், நிலங்களை கையகப்படுத்த விடமாட்டோம் என பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நெய்வேலி சுற்றுவட்டார பகுதிகளில், என்எல்சி நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படும் விடியா திமுக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில், கிராம மக்கள் சார்பில் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள், ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version