பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு அறிவிப்பு – முதலமைச்சர் பழனிசாமி

• தமிழக அரசின் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

• தமிழக அரசின் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட 7 பொருட்கள் வழங்கப்படும்.

• தொகுப்பில் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய பொருட்கள் வழங்கப்படும்.

• அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கும் வழங்கப்படும்.

• பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பை பொங்கல் திருநாளுக்கு முன்பே அனைத்து நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும்.

• பொங்கல் திருநாளை பாரம்பரிய முறைப்படி தமிழக மக்கள் இனிதே கொண்டாடி மகிழ வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Exit mobile version