தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கும் அரசியல் கட்சியினர்

ஈரோடு, தஞ்சை, கன்னியாகுமரி, காஞ்சிரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்கு சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்த்து சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குசாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்புவதற்கு முன்னதாக, வாக்கு பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி ஆகியவை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தனியார் பள்ளியில் வாக்கு இயந்திரத்தில் பொருத்தப்பட்ட சின்னங்களை பரிசோதிக்கும் பணி நடைபெற்றது. இந்த ஆய்வில், அனைத்து அரசியல் கட்சியைச் சார்ந்த நபர்கள் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து சரிபார்த்தனர்.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர் சின்னம் புகைப்படம் பொருத்தும் பணிகள், துணை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்றது.

அதேபோன்று, திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குபதிவு இயந்திரம் சரிபார்க்கப்பட்டு சின்னம் பொருத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். அரசு அலுவலர்களும், அரசியில் கட்சி பிரமுகர்களும் உடனிருந்தனர்.

Exit mobile version