தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல்களுக்கு முன்பு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தை தனியார் நிறுவனங்கள் பரிசோதிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு தடை விதிக்க கோரி, பத்திரிக்கையாளர் ஆஷிஷ் கோயல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தனியார் நிறுவனத்தின் பரிசோதிப்பது குறித்து இரண்டு வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Exit mobile version