இளைஞரை வெட்டிக் கொலை செய்த கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த அருண் பாண்டி என்பவர் கொத்தனர் வேலை செய்து வருகிறார். வழக்கு விசாரணைக்கு ஆஜாரான பின்பு அருண் பாண்டியை மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. அருண் பாண்டி உடனிருந்த சதிஸ்குமார் என்பவரையும் அந்த கும்பல், தாக்கி உள்ளது. தகவலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தப்பியோடிய கொலையாளிகளை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Exit mobile version