இந்தியன்-2 விபத்து: கமல், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்

இந்தியன்-2 படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் பலியான விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டமிட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி பிலிம்சிட்டியில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு நடைபெற்றபோது கிரேன் விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்த சாட்சியங்களுக்காக நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உட்பட சம்பவ இடத்தில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்பப்படுமென காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள கிரேன் ஆபரேட்டரை தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version