ரூட் தல மோதலில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை ஓட்டேரியில் ரூட் தல மோதலில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வழக்கில் 8 கல்லூரி மாணவர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை அண்ணாசதுக்கத்தில் இருந்து பெரம்பூர் நோக்கி செல்லும் பேருந்தில் பயணம் செய்த பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள், பயணிகள் தொந்தரவு அளிக்கும் வகையில் பேருந்தின் மேற்கூரையில் பயணம் செய்துள்ளனர். அப்போது, ஓட்டேரி கல்யாணபுரம் பேருந்து நிலையம் அருகே இரு கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல யார் என்பதில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அரசு பேருந்து ஓட்டுனர் விஜயக்குமார் அளித்த புகாரின் பேரில் தனிப்படை காவல்துறையினர், பச்சையப்பன் கல்லூரியைச் சேந்த 5 மாணவர்கள் மற்றும் மாநில கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவர்களையும் கைது செய்தனர். மாணவர்கள் 8 பேரின் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version