News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

ஏழை மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் காவல் துறையினர்

Web Team by Web Team
July 12, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
ஏழை மாணவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் காவல் துறையினர்
Share on FacebookShare on Twitter

ஏழை மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி கல்வி சேவையில் சிறப்பான பங்களிப்பை அளித்துவரும் வரும் தமிழக காவல்துறை பற்றிய செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

குற்றவாளிகள் மற்றும் ஏழ்மை நிலைகளில் உள்ளவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2003 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது தான் காவல் சிறார் மற்றும் மகளிர் மன்றங்கள். சென்னையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மன்றங்கள் சிறப்பான முறையில் இயங்கி வந்தாலும் அவற்றில் அரும்பாக்கம் காவல் நிலையத்தின் கட்டுபாட்டில் இயங்கி வரும் மன்றம் சிறப்பான கட்டமைப்போடும், அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.

300க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் இங்கு, படிப்புடன் ஒழுக்கமும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. காலை மாலை என இரு வேளைகள் இங்கு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் சட்டம், ஒழுங்கு குறித்த பாடம் மட்டுமின்றி, இங்கு படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு, கலை என எதில் ஆர்வமோ, அதில் ஈடுபடுத்தபடுகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ முகாம், ரத்த தானம் செய்யவும் ஊக்கப்படுத்தபடுகின்றனர்.

வல்லவர்களை உருவாக்குவதைவிட நல்லவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த மன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

HCL நிறுவனத்தின் உதவியோடு அமைக்கப்பட்டுள்ள கணினி அறையில் சிறுவர்களுக்கான அடிப்படை பாடங்கள் புரஜக்டர் திரை மூலமாகவும், ஆங்கில தட்டச்சு, எம்.எஸ்.ஆபிஸ் போன்றவை வகுப்புகள் மூலம் கற்று தரப்படுகிறது. தேவையும் தகுதியும் உள்ள ஏழை மாணவர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள் வழங்குவதோடு மட்டுமில்லாமல், இங்கு பயின்ற சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காவல்துறையினரே கல்லூரி கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.

இங்கு பயிற்சி பெற்றுவரும் மாணவனின் தந்தை கூறும் பொழுது தனது மகனின் பழக்க வழக்கங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன், படிப்பிலும் நல்ல முன்னேற்றம் உள்ளதாக கூறுகிறார்.

ஏழ்மை, குடும்பச்சூழல் மற்றும் தவறான நட்பு ஆகியவற்றால் தடம் மாறிச்செல்லும் இளம் வயதினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அவர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டு அவர்களின் எதிர்காலத்தை கட்டமைப்பதில் முழு மனதுடன் ஈடுபட்டுவரும் காவல் துறையினர் பாராட்டுதலுக்கு உரியவர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றனர் என்றால் அது மிகையாகாது.

Tags: ஏழை மாணவர்கள்தமிழக காவல்துறை
Previous Post

சென்னைவாசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஸ்மார்ட் பைக்

Next Post

மழை நீர் சேகரிப்பை கட்டாயமாக்குவது குறித்து ரவீந்திரநாத் குமார் எம்.பி. கேள்வி

Related Posts

யானைகவுனி படுகொலை – முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது!
TopNews

யானைகவுனி படுகொலை – முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது!

November 19, 2020
பணித்திறனாய்வு போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக காவல்துறையினருக்கு, திரிபாதி வாழ்த்து
TopNews

பணித்திறனாய்வு போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக காவல்துறையினருக்கு, திரிபாதி வாழ்த்து

July 22, 2019
நாட்டில் சிறந்த காவல்துறையாக தமிழக காவல்துறை விளங்குகிறது
TopNews

நாட்டில் சிறந்த காவல்துறையாக தமிழக காவல்துறை விளங்குகிறது

January 31, 2019
ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது – முதலமைச்சர் பாராட்டு
TopNews

ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது – முதலமைச்சர் பாராட்டு

November 23, 2018
Next Post
மழை நீர் சேகரிப்பை கட்டாயமாக்குவது குறித்து ரவீந்திரநாத் குமார் எம்.பி. கேள்வி

மழை நீர் சேகரிப்பை கட்டாயமாக்குவது குறித்து ரவீந்திரநாத் குமார் எம்.பி. கேள்வி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version