தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்டு காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை

சென்னையில் குடிபோதையில் கழுத்தை அறுத்துக்கொண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவர் வடபழனியில் மனைவி தமிழ்செல்வி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதீத போதை பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த மனைவி தமிழ்செல்வி கணவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்து அடைந்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version