ரூ.8,830 கோடிக்கு முதலீடு ஈர்ப்பு: முதல்வர் பழனிசாமிக்கு, ராமதாஸ் பாராட்டு

மூன்று நாடுகள் பயணத்தில் 8 ஆயிரத்து 830 கோடி அளவுக்கு முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர். ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் மூலம் 8 ஆயிரத்து 830 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்வதற்கான 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார மந்தநிலை நிலவி வரும் சூழலில் முதலமைச்சரின் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளின் பயணம் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை கொண்டுவர நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது என்று ராமாதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அரசின் இத்தகைய பணிகள் மேன்மேலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர், தமிழகத்தில் கணிசமான எண்ணிக்கையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் முதலீடுகள் திரட்டப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version