தேனியில் பிரதமர் மோடியின் பிரச்சாரக் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பிரசார கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பிரதமர் மோடி ஆண்டிபட்டியில் நாளை நடைபெற உள்ள பிரசாரக் கூட்டத்தில், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் லோகி ராஜன், பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர் மயில்வேல் ஆகியோரை ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடைபெறும் பகுதியில் முன்னேற்பாட்டுப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பிரதமரின் வருகைக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன.

Exit mobile version