பெட்ரோல், டீசல் விலை நிர்ணய விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது – தர்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுவதாக கூறினார்.

இதில் மத்திய அரசு தலையிடாது என கூறிய அவர், பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தபோது சில மாநில அரசுகள் குறைக்கவில்லை என்றார்.

Exit mobile version