2ஜி விவகாரத்தில் மக்கள் நிச்சயம் தண்டனை அளிப்பார்கள் – எச்.ராஜா

ஊழலுக்காக டிஸ்மிஸ் செய்யப்ட்ட கட்சி திமுக என்றும், 2ஜி விவகாரம் தொடர்பாக மக்கள் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை அளிப்பார்கள் என்றும் சிவகங்கை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெயகாந்தனிடம் எச்.ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தமிழக அமைச்சர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி பண பலத்தை பிரயோகப்படுத்தும் என்றும் ஆனால் தங்களுக்கு மக்கள் பலம் உள்ளதாகவும் கூறினார். ஊழலுக்காக டிஸ்மிஸ் செய்யப்பட்ட கட்சி தி.மு.கவிற்கு 2ஜி தொடர்பாக மக்கள் நிச்சயம் தண்டனை அளிப்பார்கள் என்றார்.

Exit mobile version