புதிய பாலம் வேண்டி 60 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்த பொதுமக்கள்

ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் 60 ஆண்டுகால கோரிக்கையான புதிய பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய அதிமுக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தையும் அரியலூர் மாவட்டத்தையும் இணைக்கிறது பெளாந்துறை பாலம். இந்த குறுகிய பாலத்தால் அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் இதற்கு 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கிய தமிழக அரசு, புதிய பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்தியது. புதிய பாலம் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டியதற்கு தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version