பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் விழா

புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.

கல்வி சீர்வரிசை விழாவையொட்டி, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக ஊரின் மையத்தில் உள்ள ஸ்ரீ அடைக்கலம் காத்தான் ஐய்யனார் கோயிலில் இருந்து பூஜை செய்யப்பட்டு சீர்பொருட்களை அங்கிருந்து நடந்தவாறு தூக்கிக்கொண்டு பள்ளிக்கு வந்தனர். அதில் பீரோ, தண்ணீர் சுத்தி கரிக்கும் கருவி, டேபிள், டிவிடி பிளையர், மைக், ஒலிபெருக்கு பெட்டி, நீர்தேக்க தொட்டி, நாற்காலிகள், குடம், பள்ளிக்கு தேவையான பொருட்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட வற்றை பள்ளி ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் வழங்கினர்.

Exit mobile version