திருவண்ணாமலை பகுதியில் இரவில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் திடீரென மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. மழையால் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பகல் நேரங்களில் வெயில் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெய்த மழை வெயிலை தணிக்கும் வகையில் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version