கொரோனா அச்சத்தால் வீடுகளை காலி செய்த கிராம மக்கள் ; வெறிச்சோடிய கிராமம்

ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நபர் இறந்ததால், அவர் கொரோனா தொற்றால் இறந்திருக்கலாம் என்ற அச்சத்தில் கிராமமக்கள் அனைவரும் வெளியேறிய நிலையில், கனகம்பாடி கிராமமே வெறிச்சோடி காணப்பட்டது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கனகம்பாடி கிராமத்தில் 45 வயது மதிக்கதக்க ஒருவர், கடந்த ஒரு வாரமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார்.

அவர் கொரோனா தொற்றால் இறந்ததாக ஊர் முழுவதும் தகவல் பரவியது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில், தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறினர்.

பணம், நகை உள்ளிட்ட முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு கிராமமக்கள் அனைவரும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

ஊரில் காவலுக்கு இருக்கும் ஒருசிலரும், கதவை சாத்திக்கொண்டு வெளியில் வராமல் வீட்டினுள்ளேயே இருக்கின்றனர்.

இதனால் கிராம வீதிகள் அனைத்தும் வெறிசோடி காணப்படுகிறது.

தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் யாரும் கிராமத்திற்குள் செல்லாததால் மீண்டும் கிராமத்திற்கு வருவதற்கு பொது மக்கள் அச்சப்படுகின்றனர்

Exit mobile version