திமுகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் கவலையில் உள்ளார்கள் – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

திமுகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் கவலையில் உள்ளதாகவும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்.மீன்பிடிக்கும் உரிமை மீனவர்கள் சங்கத்திற்கே என்ற நிரந்தர தீர்ப்பை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு ஈரோடு மாவட்டம் அந்தியூரில் முன்னாள் அமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதியில் அதிமுக மாபெறும் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Exit mobile version