திமுக கூட்டணி கட்சியினரின் அராஜக செயலால் பொதுமக்கள் அவதி

பிரசாரம் என்ற பெயரில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் திமுக கூட்டணி கட்சியினரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதற்காக மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, ராமநாதபுரம் வருகை தந்தார். அப்போது, நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டன. திமுக கூட்டணி கட்சியினரின் வாகனங்கள் சாலை முழுதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், அப்பகுதியில் 2 மணி நேரத்திற்குமேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.

Exit mobile version