நெசவாளர்களின் வாழ்வு சிறக்க உதவுங்கள் – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு, அனைவரும் கதர் அணிந்து நெசவாளர்களின் வாழ்வு ஏற்றம் பெற உதவிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கதர் ஆடைகளின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அனைத்து கதர் ரகங்களுக்கும் 30% தள்ளுபடி வழங்கி வருவதையும், கதர் மற்றும் நெசவாளர் நல வாரியத்தின் மூலம் நெசவாளர்களின் குடும்பங்களுக்கு உதவித்தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கதர் ஆடையானது எளிமை, தேசப்பற்றினை வெளிப்படுத்துவதுடன், இந்திய கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், சிறப்புமிக்க கதர் ஆடையை பொதுமக்கள் அனைவரும் வாங்கி பயன்படுத்தி, நெசவாளர்களின் வாழ்வு சிறக்க உதவிட வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version