இத்தாலியில் அதிவிரைவு ரயில் திட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு

இத்தாலியில் செயல்படுத்தவுள்ள அதிவிரைவு ரயில் திட்டத்திற்கு, அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தாலியில் டுரின், லியோன் இடையே அதிவிரைவு ரயில் திட்டப்பணிகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரயில்வே பணிகள் நடைபெறும் இடத்தை போரட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். போரட்டத்தில் ஈடுபட்டவர்களை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயற்சித்தனர்.

இத்திட்டத்திற்கு அதிக பணம் செலவிடுவதால் மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version