பொங்கல் விடுமுறையால் களைகட்டிய வண்டலூர் உயிரியல் பூங்கா

பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த நான்கு நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு லட்சம் பேர் வருகை புரிந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் பண்டிகையொட்டி போகி முதல் காணும் பொங்கல் வரையிலான நான்கு நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேலான பொது மக்கள் வருகை புரிந்துள்ளனர். 14-ம் தேதி போகியன்று எட்டு ஆயிரத்து ஐந்நூற்று 48 பேரும், 15-ம் தேதி பொங்கலன்று 15 ஆயிரத்து மூன்று பேரும் 16-ம் தேதி மாட்டுப் பொங்கலன்று முப்பது ஆயிரத்து எழுபது பேரும் காணும் பொங்கலன்று 43 ஆயிரத்து நானூற்றி 83 பேரும் வருகை புரிந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version