நாய்கள் கண்காட்சியை வெகுவாக ரசித்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற நாய்கள் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 6ம் நாளில் அரசு கால்நடைத்துறை சார்பில் பிரையண்ட் பூங்காவில், நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. ஸ்டைன் பெர்னார்ட், கண்ணி, லேபர், பொமரேனியன், ஜெர்மன் ஸெப்பர்ட், சைபீரியன் ஹஸ்கி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரியவகை நாய் இனங்கள் வகையான இடம் பெற்றன. கண்காட்சியில், பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றன. நாய்களின் தோற்றம், குணாதிசயம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கோப்பை மற்றும் சான்றிதழ்களை கோட்டாட்சியர் சுரேந்திரன், சுற்றுலா துறை அலுவலர் உமாதேவி வழங்கினர். நாய்கள் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் வெகுவாக கண்டு ரசித்தனர்.

Exit mobile version