4 ஆண்டுகளுக்கு முன்பு அமித் ஷா யாரென்றே மக்களுக்கு தெரியாது

4 ஆண்டுகளுக்கு முன்பு அமித் ஷா யாரென்றே மக்களுக்கு தெரியாது என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடுமையாக சாடினார்.

டெல்லியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, செய்தியாளரிடம் பேசினார். அப்போது, மின்னணு இயந்திரங்களை யார் வேண்டுமானாலும் இயக்க முடியும் என்பதாலேயே, அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளில் கூட, வாக்குச் சீட்டு முறையே பின்பற்றப்படுகிறது என்றார். மேலும் அமித் ஷாவிடம், கடந்த தேர்தலின் போது, தான் பிச்சை எடுக்கவில்லையென்றும், பாஜக தலைவர் அமித் ஷா அவ்வாறு அநாகரிகமாக பேசுவது தவறு என்றும் விமர்சித்தார். 4 ஆண்டுகளுக்கு முன்பு அமித் ஷா பற்றி பெரும்பாலோனோருக்கு தெரியாது என்றும், தான் தேசிய அளவிலான அரசியலில் கடந்த 35 வருடங்களாக இருப்பதாகவும் பதிலளித்தார். இப்பேச்சு அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version