பாரதிய ஜனதா ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை

மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் நடடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி நிறுவனங்களை முழுமையாக வழிநடத்த தனியார் பங்களிப்பு தேவை என கூறினார்.

தேர்தல் நேரத்தில் பாஜக அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றவில்லை என கூறிய நாரயணசாமி, பண மதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியால் நாட்டில் வேலைவாய்ப்பை குறைத்து, பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக குற்றம்சாட்டினார்.

Exit mobile version