News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைத்து சிறப்பு – சிலை குறித்தான சில தகவல்கள்

Web Team by Web Team
October 31, 2018
in TopNews, இந்தியா, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைத்து சிறப்பு – சிலை குறித்தான சில தகவல்கள்
Share on FacebookShare on Twitter

இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிக உயரமான சிலை அமைத்துப் பெருமைப்படுத்தியுள்ளது இந்திய அரசு. அந்த சிலை குறித்த சில தகவல்களை பார்க்கலாம்…

குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே உள்ள ‘சாதுபெட்’ என்ற தீவுப் பகுதியில், சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில், அதாவது 597 அடியில் மிக பிரமாண்டமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. பீடம் உள்பட சிலையின் மொத்த உயரம் 787 அடியாகும்.

சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரமாண்டமான சிலை அமைக்கப்படும் என்று கடந்த 2010 அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2015 அக்டோபர் 31ஆம் தேதி சிலையின் கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.

ராம் சூடர் என்பவர் வடிவமைத்துள்ள சிலையை, ஜோசப் மெனா என்ற கட்டடக் கலைஞர் கட்டமைத்துள்ளார்.

இரும்பு மனிதர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல், முழு சிலையும் இரும்பில் அமைக்கப்பட்டுள்ளது. சிலைக்காக நாடு முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரம் டன் இரும்பு சேகரிக்கப்பட்டது. பிரபல கட்டுமான நிறுவனமான எஸ் & டி நிறுவனம், 2,990 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சிலையை கட்டமைத்துள்ளது.

எஃகு ஃப்ரேமிங், வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் மற்றும் வெண்கல உறைப்பூச்சுடன் சிலை கட்டப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ள வளாகத்தில் நினைவுச்சின்னம், பார்வையாளர் மைய கட்டடம், நினைவுத் தோட்டம், உணவகம், மாநாட்டு மையம், கேளிக்கை பூங்கா, ஆராய்ச்சி நிலையம் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றை இணைக்கும் ஒரு சிறிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.

ஆற்றின் படுகையில் இருந்து சுமார் 500 அடி உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைந்துள்ளது. 200 பேர் ஒரே நேரத்தில் அங்கிருந்து சாத்புரா மற்றும் விந்திய மலைத்தொடர்களைப் பார்த்து ரசிக்கும்படி கட்டமைக்கப்பட்டுள்ளது.

`ஒருமைப்பாட்டுச் சிலை’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சிலை தான், உலகிலேயே உயரமானது என சிறப்பை பெற்றுள்ளது. புகழ்பெற்ற அமெரிக்க சுதந்திர தேவி சிலையை போன்று இரு மடங்கும், பிரேசிலில் உள்ள இயேசு சிலையை விட ஐந்து மடக்கும் உயரமானது.

3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிலையை, வல்லபாய் படேல் பிறந்த தினமான அக்டோபர் 31ஆம் தேதியான இன்று, பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

Previous Post

மாதவன் நடித்த உண்மை கதையை தழுவிய "ராக்கெட்ரி" படத்தின் டீசர் வெளியானது

Next Post

இந்திராகாந்தியின் 34-வது நினைவுநாள் அனுசரிப்பு – டெல்லியில் மன்மோகன், ராகுல், சோனியா உள்ளிட்டோர் மரியாதை

Related Posts

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
அரசியல்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
அரசியல்

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
அரசியல்

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
Next Post
இந்திராகாந்தியின் 34-வது நினைவுநாள் அனுசரிப்பு – டெல்லியில் மன்மோகன், ராகுல், சோனியா உள்ளிட்டோர் மரியாதை

இந்திராகாந்தியின் 34-வது நினைவுநாள் அனுசரிப்பு - டெல்லியில் மன்மோகன், ராகுல், சோனியா உள்ளிட்டோர் மரியாதை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version