ரயில் ரத்து செய்யப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, ரயிலில் பொதுமக்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பணி நிமித்தமாக செல்லும் பொது மக்கள் ரயிலில் பயணம் செய்யத் தொடங்கினர். இந்நிலையில், சென்னையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர், பயணிகளை சமாதானப்படுத்தி, அடுத்த ரயிலில் அனுப்பி வைத்தனர்.

Exit mobile version