ஆங்கில பள்ளி மீதான மோகத்தை பெற்றோர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் – செங்கோட்டையன்

மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஆங்கில பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகம் முழுவதும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11 லட்சத்து 17 ஆயிரம் மிதிவண்டிகள் வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறினார்.

மேலும், பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்த இருந்த 14 வகையான இலவச திட்டங்களை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அப்போது அவர் கூறினார்.

Exit mobile version