News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி-முன்பதிவு செய்து முறையாக தரிசனம் பெற நினைப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்…

Web Team by Web Team
July 4, 2021
in TopNews, இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம், வீடியோ
Reading Time: 2 mins read
0
பழநி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி-முன்பதிவு செய்து முறையாக தரிசனம் பெற நினைப்பவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்…
Share on FacebookShare on Twitter

பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில்‌ பக்தர்கள்‌ 05.07.2021 நாள் காலை
6.00 மணி முதல்‌ இரவு 8.00 மணி வரை  அனுமதிக்கப்பட உள்ளனர்‌.

image

பக்தர்களின்‌ நலன்‌ கருதி இத்திருக்கோயிலின்‌ குடமுழுக்கு விழா நினைவரங்கத்தின்‌ வழியாக சென்று படிப்பாதையை அடைந்து
தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்‌. பக்தர்கள்‌ செல்லும்‌ வழியில்‌ உடல் வெப்பநிலை(Termal Scanner) சோதனைக்குட்படுத்தப்பட்டு நோய்‌ அறிகுறிகள்‌ இல்லாதவர்கள்‌ மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்‌.

image

திருஆவிணன்குடி திருக்கோயிலிலும்‌ ஒருவழிப்பாதையாக சென்று சுவாமி தரிசனம்‌ செய்ய அனுமதிக்கப்படுவார்கள்‌.

image
சளி, இருமல்‌, காய்ச்சல்‌ உள்ளவர்கள்‌ திருக்கோயிலுக்குள்‌ அனுமதிக்கப்படமாட்டார்கள்‌. திருக்கோயிலுக்கு வருகை தரும்‌ பக்தர்கள்‌ அனைவரும்‌ கண்டிப்பாக முகக்கவசம்‌ அணிந்திருக்க வேண்டும்‌. முகக்கவசம்‌ அணியாத பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

image

இணைய வழி முன்‌ பதிவு அனுமதி சீட்டு உள்ள நபர்கள்‌ மட்டுமே மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்‌. இணைய வழி பதிவு இல்லாதவர்கள்‌ நேரில்‌ வந்தால்‌ இணையவழி பதிவு செய்தவர்கள்‌ வராத பட்சத்தில்‌ மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்‌. திருக்கோயிலின்‌ மலைக்கோயிலில்‌ ஒரு மணி நேரத்திற்கு 1000 பக்தர்கள்‌ மட்டுமே தரிசனம்‌ செய்ய அனுமதிக்கப்படுவர்‌.

image

இத்திருக்கோயிலின்‌ இணையதள முகவரி www.palanimurugan.hrce.tn.gov.in என்ற இணையதளத்தை தேர்வு செய்து அதில்‌ தரிசன முன்பதிவு செய்து திருக்கோயில்‌ அமைந்துள்ள மாவட்டமான திண்டுக்கல்‌ மாவட்டத்தை தேர்ந்தெடுத்து திரையில்‌ தோன்றும்‌ இத்திருக்கோயிலுக்கான தரிசன முன்பதிவு உள்ளே சென்று இலவச மற்றும்‌ கட்டண தரிசனத்தில்‌ தங்களுக்கு தேவையான தேதியில்‌ முன்பதிவு செய்து கொள்ளலாம்‌.

image

இணையதள வசதி இல்லாத சாதாரண கைபேசி வைத்திருக்கும்‌ பக்தர்கள்‌ 04545-242683 என்ற தொலைபேசி எண்ணில்‌ தொடர்பு கொண்டு பெயர்‌, முகவரி, தொலைபேசி எண்‌ மற்றும்‌ ஆதார்‌ எண்‌ தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ள
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவாமி தரிசனத்திற்கு முந்தைய நாள்‌ மட்டுமே முன்பதிவு செய்யப்படும்‌. மேற்படி முன்பதிவு கிராம பகுதிகளிலிருந்து வரும்‌ அழைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும்‌. தினசரி காலை 10.00 மணி முதல்‌ ந்ண்பகல் 01.00
மணி வரையிலும்‌, பிற்பகல்‌ 02.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரையிலும்‌ முதலில்‌ வரும்‌ 200 அழைப்புகள்‌ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌. இப்பதிவின்‌ வழியாக தரிசனத்திற்கு வரும்‌ பக்தர்கள்‌ ஆதார்‌ அடையாள அட்டை கட்டாயமாக
கொண்டு வர வேண்டும்‌.

image

அபிஷேக பஞ்சாமிர்தம்‌ மற்றும்‌ முறுக்கு, அதிரசம்‌, லட்டு, சர்க்கரைப்பொங்கல்‌ மற்றும்‌ புளியோதரை உள்ளிட்ட
பிரசாதங்கள்‌ பாதுகாப்பான முறையில்‌ தயார்‌ செய்யப்பட்டு மலைக்கோயிலில்‌ பக்தர்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

image

விற்பனை செய்யப்படும்‌ பிரசாதங்கள்‌ அனைத்தும்‌ பேப்பர்‌ கவர்களுடன்‌ கொண்டு செல்லும்‌ வகையில்‌ வழங்கப்படுகிறது. பிரசாதங்களை திருக்கோயில்‌ வளாகத்தில்‌ அமர்ந்து உண்ணுவதற்கு அனுமதி கிடையாது.அன்னதானம்‌ பொட்டலங்களாக வழங்கப்படவுள்ளது. அன்னதான பொட்டலங்களை திருக்கோயில்‌ வளாகத்தில்‌ அமர்ந்து உண்ணுவதற்கு அனுமதி கிடையாது.

image

பக்தர்கள்‌ தேங்காய்‌, பூ, பழம்‌ ஆகியவற்றை கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை. காலபூஜை மற்றும்‌ அபிஷேகம்‌ நடைபெறும்‌ பொழுது உபயதாரர்கள்‌ உட்பட பக்தர்கள்‌ உள்ளே அமர்ந்து சுவாமி தரிசனம்‌ செய்ய அனுமதி கிடையாது.பக்தர்கள்‌ படிப்பாதை மற்றும்‌ யானைப்பாதையினை மட்டுமே பயன்படுத்தி மலைக்கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்‌.

image

மின்‌இழுவை இரயில்‌ (WINCH)இயக்கப்படும்‌. கம்பிவட ஊர்தி (ROPECAR) சேவை இல்லை. மலைக்கோயிலுக்கு வருகை தரும்‌ பக்தர்கள்‌ அரசு அறிவித்துள்ள வழிபாட்டுத்‌தலங்களில்‌ பின்பற்றப்பட வேண்டிய நிலையான இயக்க நெறிமுறைகளை 50%
முறையாக பின்பற்றுவதை உறுதி செய்த பின்னர்‌ கம்பிவட ஊர்தி சேவை இயக்கப்படும்‌.

image

சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம்‌ செய்ய வேண்டும்‌. தங்கரதம்‌ மற்றும்‌ தங்கத்தொட்டில்‌ ஆகிய சேவைகள்‌ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முடிக்காணிக்கை செலுத்த வரும்‌ பக்தர்கள்‌ தேவஸ்தான முடிக்காணிக்கை மண்டபத்தில்‌ உரிய பாதுகாப்பு அம்சங்களுடன்‌ முடிக்காணிக்கை செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்‌.முடிக்காணிக்கை செலுத்தவரும்‌ பக்தர்கள்‌ இருப்பிட விபரம்‌ மற்றும்‌ தொலைபேசி எண்‌ணை தெரிவிக்க வேண்டும்‌.முடிக்காணிக்கை செலுத்த வரும்‌ பக்தர்‌ மட்டுமே முடிமண்டபத்திற்குள்‌ செல்ல அனுமதிக்கப்படுவர்‌.

image

சுவாமி தரிசனத்திற்கு நோய்‌ அறிகுறிகள்‌ உள்ளவர்கள்‌, 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்‌, 65 வயதுக்கு மேற்பட்டவர்கள்‌, கர்ப்பிணி பெண்கள்‌ திருக்கோயிலுக்கு வருகை தருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

image

வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பை செய்தியாளர் வாயிலாக கேட்டுப்பெற …

 

 

Tags: allowedmantatorynewsjonlineopenpalani muruganregistrationstandard operating proceduretelephoneTemplevisitwebsite
Previous Post

உதயநிதிக்காக மின்சாரத்தை திருடிய திமுகவினர்

Next Post

கடலுக்கடியில் திடீர் வெடிப்பு -தீயை அணைக்கும் பணியில் கப்பல்கள் தீவிரம்..

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! செந்தில் பாலாஜியின் அந்த 100 நாட்கள்!

September 22, 2023
Next Post
கடலுக்கடியில் திடீர் வெடிப்பு -தீயை அணைக்கும் பணியில் கப்பல்கள் தீவிரம்..

கடலுக்கடியில் திடீர் வெடிப்பு -தீயை அணைக்கும் பணியில் கப்பல்கள் தீவிரம்..

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version