இந்திய அதிரடி தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அவசர ஆலோசனை

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய விமானங்கள் தாக்கி அழித்தன. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2 ஆயிரம் ரக விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன. இந்திய விமான படை நிகழ்த்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்திய விமானப்படை தாக்குதல் நிகழ்த்தியது குறித்து ஆலோசிக்க அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு அவசர அழைப்பு விடுத்துள்ளது. இஸ்லாமாபாத் நகரில் நடைபெற உள்ள இந்த அவசர கூட்டத்திற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அழைப்பு விடுத்துள்ளார்.

Exit mobile version