வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்ய வாய்ப்பு

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக பரவலாக மழை பெய்திருந்தது. ஆனால், வட மாவட்டங்களில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், அனல் காற்றும் வீசத் தொடங்கியது. இதன் காரணமாக பொது மக்கள் வெளியே வர முடியாமல் அஞ்சினர். இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று பிற்பகலில், கருமேகங்கள் கூடி மழை பெய்தது. இந்த திடீர் மழை, பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனிடையே, இந்த மழை மேலும் இரு நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் எற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால், மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version