சென்னையில் மர்ம நபர்களால் கொட்டப்பட்ட காலாவதியான திண்பண்டங்கள்

சென்னை முகப்பேரில் மர்ம நபர்களால் காலாவதியான திண்பண்டங்கள் குவியலாக கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை முகப்பேர் அருகே, சர்வீஸ் சாலையில் திண்பண்ட பொட்டலங்கள் கொட்டப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் அவற்றை சோதனையிட்டனர். அப்போது அனைத்தும் காலாவதியானவை என தெரியவந்தது. இதையடுத்து அவைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

காலாபதியான பொருட்களை இவ்வாறு வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைத்து கடைகளிலும் காலாவதியான திண்பண்டங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Exit mobile version